க்களவையில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவால் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022, ஆனது சில தனிநபர்கள், குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆகியோர் களை அவர்களின் தனிப்பட்ட உயிரியல் தரவுகளைப் பகிர கட்டாயப்படுத்துகிறது.

எனவே இந்த மசோதா அதிகப்படியான அரசாங்க கண்காணிப்பு மற்றும் தனியுரிமை மீறல் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது. மசோதாவின் வாசகத்தின்படி, மசோதாவானது,

குற்றவியல் விஷயங்களில் அடையாளம் காணுதல் மற்றும் விசாரணை நோக்கங்களுக்காக குற்றவாளிகள் மற்றும் பிற நபர்களின் அளவீடுகளை எடுப்பதற்கும், பதிவுகளை பாதுகாக்கவும் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் தற்செயலான விஷயங்களுக்கும்” அங்கீகாரம் வழங்குவதாகும்.

இந்தியாவில் கொண்டு வரப்படும் ஒரு புதிய சட்டம், பயோமெட்ரிக் தரவைச் சேகரிக்க, சட்ட அமலாக்க துறைகளுக்கு பெரும் அதிகாரங்களை வழங்குகிறது.

Advertisment

aaa

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, கைது செய்யப்பட்டவர்கள் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்கள், அவர்களின் கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன் போன்ற முக்கியமான தரவுகளைப் பகிர்ந்து கொள்வதை கட்டாயமாக்குகிறது. 75 ஆண்டுகள் வரை காவல்துறை இந்தத் தரவை வைத்திருக்க முடியும்.

எதிர்கட்சித் தலைவர்கள் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இது கொடூரமானது மற்றும் சட்டவிரோதமானது, இது நாட்டு மக்களைத் தொடர் கண்காணிப்பில் இருக்கச் செய்யும் என்று கூறினர்.

மத்திய அரசு, இந்த சட்டமசோதா, காவல்துறையை நவீனமயமாக்குவ தாகவும், குற்றங்களை விரைவாகத் தீர்க்க உதவுவதாகவும், இது தண்டனை விகிதத்தை அதிகரிக்கும் என்றும் வாதிடுகிறது.

சர்ச்சைக்குள்ளாகக் காரணம் இது அதிகமான தனிப்பட்ட தரவை அரசிடம் ஒப்படைக்கிறது என்பது தான்.

இந்தியாவில் தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் இல்லை, எனவே விமர்சகர்கள் இது அரசாங்கத்தின் கையில் ஒரு ஆபத்தான உளவு ஆயுதத்தை வழங்குவதற்குச் சமம் என்று கூறுகிறார்கள்.

"சேகரிக்கக்கூடிய தரவுகளின் ஆழம் மிகவும் தீவிரமானது மற்றும் தன்னிச்சையான சேகரிப்பு அல்லது தரவு தவறாகப் பயன்படுத்தப் படுவதைத் தடுப்பதற்கான எந்தப் பாதுகாப்பும் மசோதாவில் இல்லாததால், தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தீவிரமாக உள்ளன" என்று தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வாளர் ஆதித்யா சர்மா கூறுகிறார்.

முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டம், குடிமக்களின் தனியுரிமைக்கான உரிமையைப் பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்பு மற்றும் 2017-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு ஒன்றுக்கு எதிரானது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

உச்ச நீதிமன்றம்-547 பக்கங்கள் கொண்ட ஒரு விரிவான தீர்ப்பில், "அரசியலமைப்பில் மனித கண்ணியத் தின் மையப்புள்ளி" எனத் தனியுரிமையைக் குறிப்பிட்டுள்ளது. மேலும், எந்த விதமான அரசு கண்காணிப்பும் சரியான விகிதத்திலும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்தியாவின் தற்போதைய சிறைச் சட்டமான - கைதிகளை அடையாளம் காணும் சட்டம், 1920 - புகைப்படங்கள், கைரேகை மற்றும் கால்தடம் பதிவுகளை மட்டுமே சேகரிக்க காவல்துறை அனுமதிக்கிறது. ஆனால் இது குற்றம் உறுதி செய்யப்பட்டவர்கள், பிணையில் வெளியில் இருப்பவர்கள் அல்லது ஒரு வருட கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் கூடிய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும்.

இந்தப் புதிய சட்டம், கைரேகைகள், விழித்திரை ஸ்கேன்கள், கையெழுத்து மற்றும் பிற "உயிரியல் மாதிரிகள்" போன்ற முக்கியத் தகவல்களைச் சேகரிக்கும் வகையில் விரிவுபடுத்துகிறது. இந்த "உயிரியல் மாதிரிகள்" என்ன என்பதைக் குறிப்பிடவில்லை, ஆனால் வல்லுநர்கள் இது மரபணு மற்றும் இரத்த மாதிரிகளைக் குறிக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த மாதிரிகளைச் சேகரிக்கத் தற்போது காவல்துறைக்கு வாரண்ட் தேவைப்படுகிறது.

இப்போது கைது செய்யப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள எவருக்கும் இது பொருந்தும். நீதிமன்றமோ அல்லது மாஜிஸ்திரேட்டு களோ குற்றம் நிரூபிக்கப் படாதவர்கள், அல்லது விசாரணைக்கு உட்படுத்தப் படாதவர்களின் பதிவுகளையும் தக்கவைத்துக் கொள்ளுமாறு காவல்துறைக்கு உத்தரவிடலாம்.

தேசியக் குற்ற ஆவணக்காப்பகம், 75 ஆண்டு களுக்கு இந்தத் தரவுகளை வைத்திருக்கும்.

காவல்துறையினருக்குச் சிறைகளில் அதிகம் பேரை அடைக்கும் நோக்கமில்லை. அந்த அளவு சிறைகளில் இடமும் இல்லை. ஆனால் அவர்கள் உங்களைக் கண்காணிப்பில் வைத்திருந்து, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது பற்றிய தகவலைப் பெறுவது தான் நோக்கம்.

இந்த மசோதா, இப்போது இந்த அதிகாரத்தை "தெருவில் ரோந்து செல்லும் ஒவ்வொரு காவலருக்கும்" வழங்குகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் காவல்துறைத் தலைவர் விக்ரம் சிங், நாட்டின் குற்றவியல் தரவுத்தளம் மற்றும் புலனாய்வுக் இயந்திரத்தை மேம்படுத்துவதற்கு முன்மொழியப் பட்ட சட்டம் ஒரு "சிறந்த கருவி," என்று கூறுகிறார்.

புலனாய்வு அமைப்புகள், தனி நபர் தகவல்களைச் சேகரித்துப் பயன்படுத்துவது புதிதன்று. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட பல நாடுகள், கைது செய்யப்பட்ட அல்லது தண்டனை பெற்ற நபர்களின் முக அம்சங்கள், கைரேகைகள் அல்லது விழித்திரை ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் அடையாளங்களைச் சேகரிக்கின்றன.

அரசாங்கங்கள் மற்றும் சட்ட அமலாக்கத்தால் முகத்தை அடையாளம் காணும் தொழில் நுட்பத்தை அதிகரித்து வருவது உலகம் முழுவதும் சர்ச்சைக்குரிய பிரச்னையாக மாறியுள்ளது.

இது ஹாங்காங்கில் ஜனநாயக சார்புப் போராட்டங்களின் போது நடந்தது, அங்கு சீன கண்காணிப்பு அமைப்பு, ஆர்ப்பாட்டங்களைக் கடுமையாக ஒடுக்கப் பயன்படுத்தப்பட்டது. மக்கள் தங்கள் முகங்களை மூடிக்கொண்டனர்,

பாதுகாப்பு கேமராக்களை சீர்குலைத் தனர், அடையாளச் சான்று தேவைப்படும் பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்தனர். இத்தகைய தரவுகள் பயனுள்ளதாகவும் உள்ளன.

அமெரிக்காவின் காவல்துறை, குற்றவாளிகள் மற்றும் காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய முக அங்கீகாரத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தியது, ஆனால் அல்காரிதங் களில் உள்ள சில ஒரு பக்கச் சார்புகள், இதில் தவறு ஏற்படவும் வழிவகுத்தன.

இந்தியாவில் ஏற்கனவே 2009-இல் தொடங்கப் பட்ட ஒரு அமைப்பு உள்ளது, இது ஆயிரக் கணக்கான காவல் நிலையங்களில் உள்ள குற்றப் பதிவுகளை ஒருங்கிணைக்கிறது.

நேர்மையற்ற தரவுக் கசிவுகள் மற்றும் ஊடுருவல்களின் யுகத்தில், தரவைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் திறன் குறித்தும் ஒரு குறிப்பிட்ட அச்சம் உள்ளது. உண்மையில், உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் ஐடி தரவுத்தள திட்டமான ஆதார் மூலம் இந்திய குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட தரவுக் கசிவுகள் கடந்த காலங்களில் பரவலாகப் புகாரளிக்கப்பட்டன.

"தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள எவரிடமிருந்தும் சட்ட அமலாக்க அமைப்புகள், அதிக அளவு தரவுகளைச் சேகரிக்க இந்த மசோதா அனுமதிக்கிறது.

முன்மொழியப்பட்ட சட்டம்

மசோதாவின் பிரிவு 2(1)(க்ஷ) ஆனது விரல் பதிவுகள், உள்ளங்கை-அச்சு பதிவுகள், கால்தடம் பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு, கையொப்பங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட நடத்தை பண்புகளை உள்ளடக்கிய அளவீடுகள், அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் (ஈழ்டஈ), 1973 இன் பிரிவு 53 அல்லது பிரிவு 53ஆ இல் குறிப்பிடப்பட்டுள்ள வேறு ஏதேனும் சோதனைகளை பற்றி குறிப்பிடுகிறது. பிரிவு 53 என்பது கைது செய்யப்பட்ட நபரின் மருத்துவப் பரிசோதனை தொடர்பானது.

கைதிகளை அடையாளம் காணும் சட்டம், 1920-ஐ மாற்றவும் இந்த சட்டம் முயல்கிறது. இந்தச் சட்டம் பெரும்பாலும் குற்றவாளிகள் மற்றும் சிறைத்தண்டனை அனுபவிக்கும் நபர்களுக்கான அளவீடுகளை சேகரிப்பதற்குப் பயன்படுத்தப் பட்டது. 1920 சட்டத்தின் கீழ் அளவீடுகள் என்பது விரல் பதிவுகள் மற்றும் கால்தட பதிவுகளை மட்டுமே உள்ளடக்கியது.

1920 சட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த மசோதா தனிநபர்களுக்கும் பொருந்துகிறது. மூன்று வகை தனிநபர்களுக்கு சட்டம் பொருந்தும் என்று மசோதா முன்மொழிகிறது.

தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தச் சட்டத்தின் கீழும் தண்டனைக் குரிய குற்றத்திற்காகத் தண்டனை பெற்றவர்கள்.

சட்டப் பிரிவு 107, 108, 109 அல்லது 110 இன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக, நல்ல நடத்தைக்காக அல்லது அமைதியைப் பேணுவதற்காக ஈழ்டஈயின் பிரிவு 117-இன் கீழ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டவர்கள். இவை குற்றத்தைத் தடுக்கும் நோக்கில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள்அல்லது “பழக்கமான குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட விதிகளாகும்.

நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் தண்டிக்கப்படக் கூடிய குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அல்லது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள். இதில் தேசிய பாதுகாப்பு சட்டம் அல்லது பொது பாதுகாப்பு சட்டமும் அடங்கும்.

கூடுதலாக, ஒரு பெண் அல்லது குழந்தைக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது ஏழாண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தவிர, வேறு எந்தக் குற்றத்திலும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மசோதாவின் கீழ் அவரது உயிரியல் மாதிரிகளை எடுக்க அனுமதிக்க மறுக்கலாம் என்று மசோதா கூறுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து அத்தகைய தரவு சேகரிக்கப்பட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் விசாரணை யின்றி விடுவிக்கப்பட்ட பிறகு அல்லது நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகு அல்லது வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஒரு மாஜிஸ்திரேட் எழுத்துப்பூர்வமாக கூறாவிட்டால், அத்தகைய தரவுகள் பதிவு களிலிருந்து அழிக்கப்படலாம் என்று மசோதா கூறுகிறது.

இந்தத் தரவு சேமிக்கப்படும் முறை

தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் எந்தவொரு குற்றத்தையும் தடுத்தல், கண்டறிதல், விசாரணை மற்றும் வழக்குத் தொடருதல் ஆகியவற்றின் நலன்களுக்காக சேகரிக்கப்பட்ட உயிரியல் தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திடம் (சஈதஇ) ஒப்படைக்க வேண்டும் என்று மசோதா கூறுகிறது.

என்சிஆர்பி, சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம் அல்லது வேறு ஏதேனும் சட்ட அமலாக்க நிறுவனங்களிட மிருந்து அளவீடுகளின் பதிவை சேகரிக்க முடியும், மேலும் தேசிய அளவில் அளவீடுகளின் பதிவைச் சேமிக்கவும், பாதுகாக்கவும் மற்றும் அழிக்கவும் மற்றும் அத்தகைய பதிவுகளை எந்தவொரு சட்ட அமலாக்க நிறுவனத்துடனும் பகிரவும் பரப்பவும் அதிகாரம் பெற்றிருக்கும். காவல் துறை இன்னும் மாநிலப் பட்டியலில் இருப்பதால், ஏதேனும் மாநிலங்கள் இந்தத் தகவலைப் பகிர மறுக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காவல் துறையினர் கண்காணிப்பை மேற்கொள்வதற்கான சட்டப்பூர்வ கட்டமைப்பை இந்த மசோதா வழங்குகிறது.

இந்தத் தரவைச் சேகரிப்பது, சேமிப்பது அல்லது பயன்படுத்துவது போன்ற முறைகள் அரசாங்கத்தால் விதிகளில் பரிந்துரைக்கப்படும், ஆனால் இவை குறித்து மசோதாவில் குறிப்பிடப் படவில்லை. அதேநேரம், அளவீடுகளின் பதிவேடு சேகரிக்கப் பட்ட நாளிலிருந்து 75 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் அல்லது மின்னணு வடிவத்தில் சேமிக்கப்படுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப் பிரிவு 107, 108, 109 அல்லது 110-இன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக, நல்ல நடத்தைக்காக அல்லது அமைதியைப் பேணுவதற்காக ஈழ்டஈ-யின் பிரிவு 117-இன் கீழ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டவர்களை ​​பயோமெடிக் தரவைப் பகிர கட்டாயப்படுத்தப்படுவதை இந்த மசோதா அனுமதிக்கிறது. இந்த விதிகள் தனிநபர்களின் வரம்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதுவரை எந்தவொரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படாதவர்கள், ஆனால் சந்தேகத்திற்குரியவர்கள் அல்லது ஒன்றைச் செய்ய சாத்தியமானவர்களை இந்த மசோதா உள்ளடக்குகிறது என குறை கூறுகின்றனர்.

அடிப்படை உரிமைகளுடன் மோதல்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதா பாராளுமன்றத்தின் சட்டமன்றத் திறனுக்கு அப்பாற்பட்டது என்று வாதிட்டனர், ஏனெனில் அது தனியுரிமைக்கான உரிமை உட்பட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் எந்தவொரு சட்டத்தையும் பாராளுமன்றம் கொண்டு வர முடியாது என்று அரசியலமைப்பு கூறுகிறது.

முன்மொழியப்பட்ட சட்டம்

அரசியலமைப்பின் 20(3) க்கு எதிராக விவாதிக்கப்படும், இது ஒரு அடிப்படை உரிமையாகும், இந்தச் சட்டப்பிரிவு சுய-குற்றச்சாட்டுக்கு எதிரான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. எந்தவொரு குற்றத்திற்காகவும் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபரும் தனக்கு எதிராக சாட்சியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று அது கூறுகிறது.

தனியுரிமைக்கான உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரித்த புட்டசாமி எதிர் யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு, தனியுரிமையை மீறும் எந்தவொரு அரசின் நடவடிக்கையும் சட்டத்தின் மூலம் ஆதரிக்கப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியது. அத்தகைய சட்டங்களை அனுமதிக்க மூன்று மடங்கு சோதனையையும் நீதிமன்றம் வகுத்தது. முதலில், செயல்பாடு ஒரு சட்டத்தால் ஆதரிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, அடிப்படை உரிமை களுடன் முரண்படும் அத்தகைய சட்டத்தை கொண்டு வருவதற்கு இந்த விஷயத்தில் அரசுக்கு நியாயமான அக்கறை இருக்க வேண்டும். மூன்றாவ தாக, அரசின் மீறல் அதன் நோக்கத்திற்கு சரியானதாக இருக்க வேண்டும்.

முன்மொழியப்பட்ட மசோதா சட்டம் ஒழுங்கை பராமரிக்க உதவுகிறது, எனவே இது ஒரு சட்டபூர்வமான அரசாங்க நலன் என்று அரசாங்கம் வாதிடலாம். இருப்பினும், இந்த மசோதா அதன் நோக்கங்களில் ஒன்றாக தண்டனை விகிதத்தை அதிகரிப்பது என்றும் கூறுகிறது.

முன்மொழியப்பட்ட மசோதா, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலீஸ் கண்காணிப்புக்கான சட்டக் கட்டமைப்பைக் கொண்டுவரும் அளவுக்கு, அது விரிவுபடுத்தப்படலாம்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது கடந்த 1920-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை மசோதா கொண்டு வரப்பட்டது. கடந்த 102 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்து இந்திய குற்றவியல் நடைமுறை மசோதாவை மத்திய அரசு வரையறுத்தது. கடந்த மார்ச் இறுதியில் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபத்தை மீறி மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்திய குற்றவியல் நடைமுறை சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து புதிய சட்டம் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப் பட்டது இதன்படி எந்தவொரு வழக்கில் கைதானாலும் அவரிடம் இருந்து கை, கால் விரல் ரேகைகள் உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளை சேகரிக்க முடியும். அதாவது ரத்தம், தலைமுடி, சளி, எச்சில் உள்ளிட்ட மாதிரிகளை சேகரிக்கலாம்.

மேலும் குற்றவாளியின் புகைப்படம், கருவிழி, கையெழுத்து, பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவையும் பதிவு செய்யப்படும். இதற்கான முழு அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப் படுகிறது. சேகரிக்கப்பட்ட விவரங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் 75 ஆண்டுகள் வரை மின்னணு வடிவத்தில் பாதுகாக்கப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை செய்தவர்கள், 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்களின் உடல் பாகங்கள், உயிரியல் அடையாளங்களை வலுக்கட்டாயமாக பெற புதிய சட்டம் வகை செய்கிறது.